Sunday, 12 November 2017

இரவாடல்....



·         அழுது முடித்து,அசந்து களைத்து உறங்கியதும் அவளுக்காக வெள்ளென விடிந்தது ஓர் இரக்கமற்ற காலை...

·         விம்மித்தீர்த்து, உமிழ்நீர் குடித்து கண்கள் துடைத்தப்பின் தான் எத்தனை ஆசுவாசத்தை உணர்ந்திருப்பாள்...

·         வழக்கம்போல் கண்ணீர்த்துளிகளில் நனைந்த தலையணைகளில் கழிந்தது அந்த இரவு

·         தனித்து விடப்பட்டவர்களின் இரவு, ஓர் நிசப்த நண்பகல்...

·         இரவாடியின் நீளமான பகலைப்போன்றதொரு பயணம், கனவிலேயே முடித்துவிட்டேன்....

·         நினைவுகளிட்ட எச்சம் இந்த கனவுகள்...


·         இரவின் வசீகரம் நள்ளிரவில் இருப்பதாக உணர்கிறேன், அடர்த்தியான முன்னிரவின் முடிவில் என் தேடல் ஓய்ந்து களைப்பில் கண்ணயரும் போது முடிந்து போகிறது இந்தஇரவாடல்....

No comments:

Post a Comment