Tuesday, 28 October 2014

#அவனதிகாரம்




 





  • அவன் கரம் பிடித்ததில் பொறாமையில் அவன் கடிகார முள்ளும் குத்துகிறது என்னை என்னுடன் போட்டியிடுகிறது அவன் கைக்கடிகாரம் அவன் கைகளை பற்றிக்கொள்ள…

  • வெறுத்து ஒதுக்கியிருந்தால் வலித்திருக்காது விரும்பி ஒதுங்கியிருப்பதால் வலிக்கிறது!!

  • நீயில்லா நேரத்தில் உன் தேநீர் கோப்பையும் , மடித்து வைத்த சட்டையும் துணை சேர்கிறது என்னுடன்!!

  • உன் இதழோரப்புன்னகையை ரசிக்க நான் படும் பாடு!! உன் கண்ணும் , என் கண்ணும் தடுமாறுகிறது வெட்கத்தில்!!

  • ஊடல் உடைந்தது வழக்கம் போல் தவறு என்னுடையதென்று ஒப்புக்கொண்டு முடித்துக்கொண்டேன்!!

  • கட்டியனைத்ததைவிட இறுக்கமாக கைகளை பற்றிகொண்டது நெருக்கத்தை இன்னும் அதிகரித்தது நமக்குள்…

  • அவன் பார்வையில் என் கண்மையும் சிவந்து விடுகிறது வெட்கத்தில்…

  • ·கண்மையும் கரைந்து போகும் சுட்டெரிக்கும் அவன் பார்வையில்

  • உன் நலவிசாரிப்புக்களுக்காவாவது நித்தம் வரவேண்டும் நூறு டிகிரி காய்ச்சலெனக்கு…..

  • கூட்ட நெரிசலிலும் நெருங்கிவருகிறது உன் நினைவுகள் விலகமுடியாமல் தவிக்கிறேன்

  • என்னவனின் தன்னுடைமையுணர்வு எனக்கு கர்வத்தை அளிக்கிறது ” நான் அவனுடையதாம்”

  • ·உன் முத்தத்தால் கரைய காத்திருக்கிறது என் நெற்றிக் குங்குமம்

  • ·நீ கட்டி அணைக்கும் அணைப்பை விட கைகளை இறுக்கமாக பிடிக்கும் பொழுது நெருக்கம் அதிகமாகிறது நமக்குள்

  • எத்தனை முறை அவமானப்படுத்தினாலும் அறிவு வரவில்லை எனக்கு , அன்பு வரவில்லை உனக்கு!!      ·

  • பரிமாறிக்கொண்ட மின்னஞ்சல் அரட்டைகளும், குறுந்தகவல்களும் நீயில்லாத வெறுமையை ஈடுசெய்கிறது

  • நீ அனுப்பவில்லை எனத்தெரிந்தும் ஒவ்வொரு முறையும் அலைபேசி குறுந்தகவலைப்பார்த்து ஏமாறுகிறேன் பேதைபோல்

  • உன்னை காதலிப்பதை மட்டுமே செய்கிறேன் அதனால் இதுவும் தவமே

  • தேநீர் கோப்பைகள் காதலை எளிதில் சொல்லிவிடுகிறது # (அருந்திய ) கோப்பை பரிமாற்றங்களில்

  • உரையாடல்களுக்கு நடுவே நீ சொல்லும் “ம்” ம்மை உன் உதட்டிலிருந்து நான் சொல்ல ஆசை

  • உன்னை அத்தான் என்று நான் அழைத்ததற்கு காரணம் அத்தனையும் நீதான் என்பதால்

  • உனக்கு ட்டை கட்டிவிடும் முன் என் கழுத்தில் டை கட்டி ஒத்திகை பார்த்துக்கொண்டதால் நானும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே

  • முத்துப்பற்க்களால் கடித்த தடையங்கள்யாவும் முத்துமாலை ஆகியது கழுத்தில்

  • உன் முத்தத்தால் வந்த முகப்பரு மின்னிக்கொண்டே    இருக்கிறது கன்னத்தில் ஈரம் காய்த்த பின்னும்.

  • என்னால் உனக்காக நேரத்தை மட்டுமே ஒதுக்க முடிந்தது உனக்கோ என்னையே ஒதுக்கிவிட முடிகிறது!!

  • மழையில் நனைந்தபடி வந்தான் என்னவன் தலைதுடைத்துவிடும் சாக்கில் என்னை துடைத்துக்கொண்டேன் அவனிடம்

  • யோசிக்கும் முன்பே உன்னை நேசித்து விட்டேன் இன்று யோசித்து கொண்டிருக்கின்றேன் ஏன் நேசித்தேன் என்றல்ல இன்னும் உன்னை எப்படி நேசிப்பதென்று

  • உன் கல் நெஞ்சத்தில் எனக்கு இடம் கொடுக்காவிட்டாலும் பரவா இல்லை உன் கல்லறையின் அருகில்லாவது இடம் கொடு. உன் அருகில் இருந்து விட்டு போகிறேன்

  • உன் தேநீர் கோப்பையாக விரும்புகிறேன் அப்பொழுதுதான் நீ தேநீர் குடிக்கும் பொழுதெல்லாம் எனக்கு முத்தங்கள் கிடைக்கும்

  • மழையில் நனைந்தபடி வந்தான் என்னவன் தலைதுடைத்துவிடும் சாக்கில் என்னை துடைத்துக்கொண்டேன் அவனிடம்

  • என் பெயரின் சுகம் அவன் அழைக்கையில் தெரிகிறது #செவிடியாய் சில நிமிடங்கள்

  • அவன் முரட்டுக் கோபத்திற்கும் என் செல்ல சினுங்களுக்கும் பொருந்திய பிறகெதற்கு ஜாதகப்பொருத்தம்

  • பிறை நிலவு சிதறிக்கிடக்கிறது எங்கள் வீடு முழுவதும் # அவன் வெட்டி எறிந்த நகங்கள்

  • செவ்விதழ்களும் நிறம் வெளுத்துத்தான் போகிறது அவன் முத்தத்தில்….

  • அவனை ஆபீஸுக்கு அனுப்பிவிட்டுவிட்டு அவன் நினைவுகளை வரவழைத்து விட்டேன் என் தனிமைக்குத்துணையாய்…


5 comments: